சுப்ரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் ஆகிய மூன்று படங்களில் இயக்குநராக, தயாரிப்பாளராக மற்றும் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியவர் சசிகுமார்.
பரத் - சந்தியாவை வைத்து ‘கூடல் நகர்’ என்ற படத்தை இயக்கியவர் சீனுராமசாமி. இவர் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் தற்போது ‘தென் மேற்கு பருவக்காற்று’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
தமிழின படுகொலையை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, பிக்கியில் வகிக்கும் பதவியை துறந்து நேர்மையாக நிமிர்ந்து நில்லுங்கள் என்றுதான் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.
ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் “எந்திரன்” படப்பிடிப்பு முடிந்துள்ளது. புதிதாக ஓரிரு சீன்கள் எடுத்து இணைக்க இயக்குனர் ஷங்கர் விரும்பினார்.
தமிழ் நடிகை விமலா ராமன், ஹாலிவுட் படம் ஒன்றில் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உன்னாலே உன்னாலே, ஜெயங்கொண்டம் படங்களில் நடித்த வினய் நடிக்கிறார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தமது டூயட் மூவிஸ் சார்பாக தயாரித்து வரும் படம் இனிது இனிது. இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி சக்கைகோடு போட்ட ஹேப்பி டேஸ் படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தை குகன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கி வருகிறார்.
‘சுவேதா, வெலிங்டன் ரோடு’ படத்தில் ஏன்தான் நடித்தோமோ என்று நொந்து போயிருக்கிறார் கீர்த்தி சாவ்லா. ‘சிலந்தி’ படத்தை தயாரித்த நிறுவனம் இப்போது கீர்த்தி சாவ்லாவை வைத்து ‘சுவேதா, வெலிங்டன் ரோடு’ படத்தை எடுத்து வெளியிட்டது.
2007, 2008 ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் அடுத்த மாதம் 8 ந் தேதி நடக்கிறது. சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
இணையதளம் என்றாலே கோபத்தில் எகிறித்தான் குதிக்கிறார்கள் சினிமாக்காரர்கள். அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. பிரிண்ட் மீடியா என்றால் அச்சில் மட்டும்தான் கொண்டு வர முடியும். ஆனால் இணையதளக்காரர்களோ, படங்களின் வீடியோக்களையும் பாடல்களையும் இணையத்தில் ரகசியமாகப் போட்டுத் தாக்கிவிடுகிறார்கள்.
தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கு நடிகை ராதிகா கண்டன கடிதம் அனுப்பி அதை அறிக்கையாகவும் வெளியிட்டு உள்ளார்.
ஜாலி மூடில் இருக்கிறார் பிரபுதேவா. நயன்தாரா பிரச்சனையை மீடியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டிவிட்டது ஒரு காரணம் என்றாலும், இன்னொரு காரணம் அவருடைய இந்திப்படம் ஹிட்டானதுதான்.
மீரா ஜாஸ்மினுக்கு சமீபகாலமாக படங்கள் ஏதும் வெளிவராத நிலையிலும் பிஸியாக இருக்கிற ஒரே நடிகை இவர்தான். சக நடிகைகள் ஆச்சரியப்படும் அளவிற்கு தமிழ், தெலுங்கு, கன்னடா என தென்னிந்திய மொழிகளில் புகுந்து நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார்
அழகிருக்கு, திறமையும் இருக்கு, ஆனால் சதா கைவசம் படங்கள் மட்டும் இல்லை. உட்காந்து யோசித்தும் ஒன்றும் புரியாமல் இந்திப் பக்கம் தாவினார். அங்கும் சரியான ரெஸ்பான்சில்லை.
தேனியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ட்ரீட் கொடுப்பதற்காக கோவா வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் காதல், மோதல், காமெடி அனுபவங்களை திரைப்படமாக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு.
‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். தொடர்ந்து இவருடைய படங்கள் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தன.
மலையால சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தீவிர விசிறிகள் தமிழ்நாட்டில் அதிக அளவில் இருக்கிறார்கள். கடந்த 5 வருடமாக எந்த ஒரு நேரடி தமிழ் படத்திலும் இவர் நடிக்கவில்லை.
வீட்டு வசதி வாரியத்திடமிருந்து விஜய் வாங்கிய நிலம் தொடர்பாக விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபற்றி விஜய் சார்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு காட்சியாவது அமெரிக்காவில் எடுக்க வேண்டும் என்பது கௌதமின் சென்டிமெண்டாகிவிட்டது. வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்களைத் தொடாந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கிளைமாக்ஸையும் அமெரிக்காவில் எடுத்துள்ளார்.
பாலா தனது புதிய படத்துக்கு முதலில் தேர்வு செய்தது அண்ணன், தம்பியான ரமேஷ் மற்றும் ஜீவாவை. முன்னணி ஹீரோக்களை வைத்து படம் பண்ணலாமே என நண்பர்கள் கூறிய அறிவுரையின்படி அவர்களுக்குப் பதில் விஷால், ஆர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாலா.
‘பேராண்மை’ தந்த வெற்றிக்களிப்புடன் இருக்கும் ஜனநாதன் சூட்டோடு சூடாக அடுத்தப் படத்தின் கதையையும் ரெடி செய்து விட்டார்.
‘கம்பிக்குள் கூச்சம்’ என்று வேண்டுமானால் கட்டுரை எழுதலாம் புவனேஸ்வரி. அந்தளவுக்கு நொந்து போனாராம் சிறைச்சாலையில். வெளியில் வந்த அவர் நடிகர் சங்கத்தில் நேரில் விளக்கமளிக்க முயன்றார் என்றும், பொறுங்கள் பேசலாம் என்று அங்கிருந்து பதில் வந்ததாகவும் தகவல்.
படத்துக்கு படம் வித்தியாசப்பட, சூர்யாவின் ரேட்டிங் இப்போது மேலே.. மேலே.. மேலே ஏறிடுச்சு. K.S.ரவிகுமார் காம்பினேஷனில் கலக்கியுள்ள ‘ஆதவன்’ தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
சென்னையில் நடிகர் விவேக்கின் கொடும்பாவியை எரித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இருப்பினும் போலீஸாரின் தலையீட்டீன் பேரில் அது கைவிடப்பட்டது
வீட்டில் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாக கைதான நடிகை புவனேஸ்வரி தாக்கல் செய்த ஜாமீன் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இயக்குநர் மணிவண்ணன் மகள் ஜோதி - சதீஷ் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. சுயமரியாதைப்படி நடந்த இந்த திருமணத்தில் ரஜினியும் சத்தியராஜூம் கலந்து கொண்டனர்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என ஏகப்பட்ட ஏரியாக்களை ஒண்டி ஆளாக நின்று கலக்கிக் கொண்டிருந்தது போதாது என்று இப்போது இசையையும் தன் பக்கம் இழுத்துப் போட்டுக் கொண்டுள்ளார் பேரரசு.
தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் பிரகாஷ்ராஜ். காலையில் முதல்வர் கலைஞரிடமிருந்து அழைப்பு.
பத்துகோடியே சொச்சம் பணத்தை கேட்டு கமல்ஹாசனை நெருக்குகிறது பிரமிட் சாய்மீரா. இது மர்மயோகி படத்திற்காக கொடுத்த அட்வான்ஸ் தொகையாம்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போலோ போட்டியின் தொடக்க விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்.