இங்குள்ள சிவன் "வாதபுரீஸ்வரர்" அதாவது வாயுவால் வழி படப் பட்டவர் என்று வழங்கப் படுகிறார்.
இங்குள்ள சிவன் ஆலயத்தில் சனி பகவன் சந்நதி தனியே அமைந்திருப்பது பிரசித்தி.சனி பகவான் வாத நோயால் அவதிப் பட்ட போது இங்குள்ள சிவனை பூசித்து அதனால் வாதநோய் தீர்ந்ததால் "வாதவூர்" என்று தலம் பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.இன்றும் மக்கள் நோய் தீர இக் கோவிலுக்கு வருகின்றனர்.
மாணிக்கவாசகர் பக்தியியினால் குதிரை (பரி) வாங்க அரிமர்தன பாண்டிய மன்னன் தந்த காசை "திருப்பெருந்துறை" திருத்தலப் பணிகளுக்கு செலவு செய்து விட அதை அறிந்து கோபம் கொண்ட மன்னன் அவரை சிறையில் அடைத்து தண்டிக்கிறான்.
பக்தனை காக்க சிவ பெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பிடித்து பரியாக மாற்றி, தேவ கணங்களை பாகர்களாக்கி தானே குதிரை சேவகனாகவும் குதிரை சாத்தோடு வந்ததாய் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இதை
"குதிரையைக் கொண்டு குடநா டதன் மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்"
"அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்"
"மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும் "
என்றெல்லாம் பாடியதிலிருந்து அறியக் கிடைக்கிறது
திருத்தலப் புகைப்படங்கள்-2 திருவண்ணாமலை
திருவண்ணாமலை என்றாலே
பெரும்பாலானோருக்கு அருணாசலேச்வர்தானே
ஞாபகத்திற்கு வருவார்..ஆனால்
திருவில்லிபுத்தூருக்கு அருகில் ஒரு
திருவண்ணாமலை உள்ளது...இது ஒரு
வைணவத்தலம்.இங்கு மஹாவிஷ்ணு
வேட்டைப்பெருமாளாக கத்தி முதலிய
ஆயுதங்களுடன் ஸ்ரீனிவாசர் என்ற
நாமகரணத்துடன் நின்ற திருக்கோலத்தில்
காட்சியளிக்கிறார்.
இது மேற்குமலைத் தொடரின் அடிவாரத்தில் சிறு மலை மீதமைந்த கோவில் ..சுமார் 200 படிக்கட்டுக்கள் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும் கோவிலிலிருந்து பார்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அழகுறத் தெரியும் கோவில் கோபுரம் கோவிலுக்கு செல்லும் பாதை
|

